துடியலூர் கருப்பராயர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கருப்பராயர் திருக்கோவிலில் ஆடி 18ம் நாளை ஒட்டி ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பராயன் சுவாமியை தரிசனம் செய்தனர்.



கோவை: துடியலூரை அடுத்த வடமதுரை கருப்பராயர் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே.நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கருப்பராயர் திருக்கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கருப்பராயன் சுவாமி வி எஸ் கே நகர் மற்றும் சார்பு நகரங்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது.

இக்கோவிலில் ஆடி 18ம் நாளை ஒட்டி ஆடிப்பெருக்கு திருவிழா ஓவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கருப்பராயன் சுவாமிக்கு பால், தயிர், நெய், திருநீர், சந்தம், இளநீர் உள்ளிட்ட அபிசேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.



இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பராயன் அருளைப் பெற்றனர்.



தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கேசரி, சுண்டல், பொங்கல், சாம்பார் சாதம் உள்ளிட்ட மகா அன்னதானம் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பராயன் திருக்கோவில் விழா குழுவினர் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் சுந்தரம், விஸ்வநாதன், தங்கவேலு, நாகசாய், ஜனார்த்தனன், விஜயகுமார் உள்பட வி எஸ் கே நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...