பார்மசி கல்லூரி அரங்கில் 'சம்பரமா' கலை விழா துவங்கியது


ஊட்டி பார்மசி கல்லூரி அரங்கில் 'சம்பரமா' கலை விழா துவங்கியது. இதில் 'இயல், இசை, நாடக கலையை மாணவ, மாணவியர் பாதுகாத்து, வளர்க்க வேண்டும்' என, கல்லூரி கலை விழாவில் தெரிவிக்கப்பட்டது.

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரி அரங்கில், 'சம்பரமா' என்ற பெயரில் கலை விழா நேற்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் டாக்டர் சின்னசாமி பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவியர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் கலையை பாதுகாக்க, வளர்க்க வேண்டும் என்றார்.



சிறப்பு அழைப்பாளராக, மைசூரு ஜெ.எஸ்.எஸ்., பல்கலை கழக பதிவாளர் டாக்டர் மஞ்சுநாதா பேசினார்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பணிபுரியும் நாளமில்லா சுரபி சார்ந்த மருத்துவ நிபுணர் சுரேஷ் தாமோதரன், கோவை ஜெம் மருத்துவமனை செயல் இயக்குனர் சங்கீதப்பிரியா, சென்னை 'அபெக்ஸ்' லேபாரட்டரி நிறுவன செயல் இயக்குனர் விஷாகன் ஆகியோர் பேசினர்.

இதனைத்தொடர்ந்து, மாணவியர் அபர்ணா, தாமினி, ஜனனி தலைமையிலான மாணவியர் குழுவினர் வரவேற்பு நடனம் நிகழ்த்தினர்.

முன்னதாக, கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். துணை முதல்வர் அப்சப் அசாம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஜெ.எஸ்.எஸ்., பல்கலையின் கீழ் செயல்படும், ஐந்து கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதில், வினாடி- வினா, நடனம், நாட்டியம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. நாளை மதியம் (மார்ச் 11) நிறைவு விழா நடைபெறவுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...