பல்லடத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி துணை ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு!

பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் குடிமகன்களால், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பாளையம் சாலையில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இக்கடையில் மதுபாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் கடை முன்புள்ள சாலை ஓரத்தில் நின்றுகொண்டு பாட்டிலை திறந்து வெட்டவெளியில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவதோடு அநாகரீகமாக நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.

மேலும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த பகுதியில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. இங்கு பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள் அங்குள்ளவர்களுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாகவும், பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், இந்த மாதம் 8 ஆம் தேதி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.



இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி துணை ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...