பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!

கோவை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீத கிருஷ்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீத கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீத கிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசாங்கத்தால் குறிப்பிட்டுள்ள திட்ட குறைதீர்ப்பாளரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளில் பிரதான் மந்திரி யோஜனா (ஊரகம்) திட்ட பயனாளிகளிடம் இருந்து வரப்பெறும் புகார்களை பெற்று, அதனை பரிசீலித்து 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்வது,

பிரச்சனை நடக்கும் இடத்திலேயே விசாரணை நடத்துவது, வலை தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொகையினை தாமதமாக வழங்குதல் அல்லது தொகை வழங்காதது தொடர்பான பல குறைகளை தானாக முன்வந்து நடவடிக்கைகளை எடுப்பது என அனைத்து குறைபாடுகளையும் கண்டறிந்து மேல் நடவடிக்கை மேற்கொள்வார்.

எனவே, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜன (ஊரகம்) திட்டம் தொடர்பான குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும்பொருட்டு பொது மக்கள் திட்ட பயனாளர்கள், கோயம்புத்தூர் மாவட்ட குறைதீர்ப்பாளர் நவநீதகிருஷ்ணன் என்பவரை 9443474364 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அலுவலகம் சார்ந்த கைபேசி எண் 8925811303ல் தொடர்பு கொள்ளலாம். எழுத்து வடிவிலான புகார்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் குறைதிர்ப்பாளரிடம் நேரில் ஒப்படைக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...