பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!

கோவை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீத கிருஷ்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீத கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீத கிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசாங்கத்தால் குறிப்பிட்டுள்ள திட்ட குறைதீர்ப்பாளரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளில் பிரதான் மந்திரி யோஜனா (ஊரகம்) திட்ட பயனாளிகளிடம் இருந்து வரப்பெறும் புகார்களை பெற்று, அதனை பரிசீலித்து 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்வது,

பிரச்சனை நடக்கும் இடத்திலேயே விசாரணை நடத்துவது, வலை தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொகையினை தாமதமாக வழங்குதல் அல்லது தொகை வழங்காதது தொடர்பான பல குறைகளை தானாக முன்வந்து நடவடிக்கைகளை எடுப்பது என அனைத்து குறைபாடுகளையும் கண்டறிந்து மேல் நடவடிக்கை மேற்கொள்வார்.

எனவே, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜன (ஊரகம்) திட்டம் தொடர்பான குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும்பொருட்டு பொது மக்கள் திட்ட பயனாளர்கள், கோயம்புத்தூர் மாவட்ட குறைதீர்ப்பாளர் நவநீதகிருஷ்ணன் என்பவரை 9443474364 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அலுவலகம் சார்ந்த கைபேசி எண் 8925811303ல் தொடர்பு கொள்ளலாம். எழுத்து வடிவிலான புகார்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் குறைதிர்ப்பாளரிடம் நேரில் ஒப்படைக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...