கோவையில் அறப்போர் இயக்கம் சார்பில் இலவச தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி!

கோவையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி நடைபெறவுள்ள நிலையில் இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://forms.gle/9WvEY865vjgByzDR7 என்ற இணைய பக்கத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள https://forms.gle/9WvEY865vjgByzDR7 என்ற இணைய பக்கத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அறப்போர் இயக்கத்தின் கோவை whatsapp குழுவில் இணைய https://chat.whatsapp.com/G37DrFLccDoBvMjM89KfUJ என்ற லிங்க்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் என்ன கற்றுக் கொள்ளலாம் என்பது பின்வருமாறு...

தகவல் பெறும் உரிமை சட்டம் என்றால் என்ன? என்பது குறித்தும், எந்தெந்த தகவலை நாம் இந்த சட்டம் மூலம் பெற முடியும்?. எந்தெந்த தகவலை நாம் இந்த சட்டம் மூலம் பெற முடியாது?. தகவல் கேட்கும் முறை என்ன? யாரிடம் கேட்க வேண்டும்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், கட்டணத்தை செலுத்தும் முறை என்ன?. விண்ணப்பத்தை எப்படி அனுப்ப வேண்டும்?. தகவல்கள் எந்த காரணத்திற்காக கேட்கப்படுகிறது என்று குறிப்பிட வேண்டுமா?. தகவல் எத்தனை நாட்களுக்குள் தரப்பட வேண்டும். தராவிட்டால் என்ன வேண்டும்?.

முதல் மேல் முறையீட்டிலும் பதில் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?. இரண்டாவது மேல்முறையீடு யாரிடம் செய்ய வேண்டும்?. இரண்டாவது மேல்முறையீடு செய்த பின் என்ன செய்ய வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...