ஆனைமலை அருகே பிடிபட்ட மக்னா யானை - சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது!

வால்பாறை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட சரளபதி பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அதனை சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடுவித்தனர்.



கோவை: கோவை சரளபதி பகுதியில் மக்னா யானையை பிடித்த வனத்துறையினர், அதனை சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடுவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனப்பகுதியில் மந்திரி மட்டம் என்ற இடத்தில் யானையை விடுவித்தனர்,

யானை சில மாதங்களாக வனப்பகுதியில் சுற்றி திரிந்து மீண்டும் சமவெளி பகுதியான ஆனைமலை, சேத்துமடை, சர்க்கார்பதி, போன்ற இடங்களுக்கு சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது, இந்த யானையை பிடித்து கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில் நேற்று காலை சரளபதி என்ற பகுதியில் யானையை வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



மக்னா யானையை கும்கி யானை உதவியுடன் லாரி மூலம் ஏற்றப்பட்டது.



தொடர்ந்து, வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லார் வன பகுதியில் விடுவதற்கு கொண்டு வந்து பொதுமக்கள் வாழும் குடியிருப்பு அருகில் பேருந்து நிலையம் அருகில் லாரியில் இருந்து இறக்கி வன பகுதிக்குள் விரட்டினர்.

குடியிருப்புக்கு அருகில் விடுவிக்கப்பட்டுள்ளதால் யானை மீண்டும் குடியிருப்புக்குள் வரலாம் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...