ஆனைமலை அருகே பிடிபட்ட மக்னா யானை - சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது!

வால்பாறை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட சரளபதி பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அதனை சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடுவித்தனர்.



கோவை: கோவை சரளபதி பகுதியில் மக்னா யானையை பிடித்த வனத்துறையினர், அதனை சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடுவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனப்பகுதியில் மந்திரி மட்டம் என்ற இடத்தில் யானையை விடுவித்தனர்,

யானை சில மாதங்களாக வனப்பகுதியில் சுற்றி திரிந்து மீண்டும் சமவெளி பகுதியான ஆனைமலை, சேத்துமடை, சர்க்கார்பதி, போன்ற இடங்களுக்கு சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது, இந்த யானையை பிடித்து கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில் நேற்று காலை சரளபதி என்ற பகுதியில் யானையை வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



மக்னா யானையை கும்கி யானை உதவியுடன் லாரி மூலம் ஏற்றப்பட்டது.



தொடர்ந்து, வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லார் வன பகுதியில் விடுவதற்கு கொண்டு வந்து பொதுமக்கள் வாழும் குடியிருப்பு அருகில் பேருந்து நிலையம் அருகில் லாரியில் இருந்து இறக்கி வன பகுதிக்குள் விரட்டினர்.

குடியிருப்புக்கு அருகில் விடுவிக்கப்பட்டுள்ளதால் யானை மீண்டும் குடியிருப்புக்குள் வரலாம் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...