கோவையில் வரும் 5ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவையில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.



கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வருகிற ஐந்தாம் தேதி கோவை துடியலூர் பகுதியில் உள்ள கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 250 க்கு மேற்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்களின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது இதில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.



இது சம்பந்தமாக கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் வீரராகவன், மாவட்ட ஆட்சித் தலைவர் கிரந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள் மீனா லோகு, இளஞ்செல்வி கார்த்திக், மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...