ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கபட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதாக கூறும் அதிகாரிகள் - பொதுமக்கள் மனு!

மதுக்கரை அடுத்த வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரசிடென்ட் ரங்கசாமி கூறுவதாகவும் அந்த நிலத்தை தங்களுக்கே தர வேண்டுமென பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: மதுக்கரை அருகே வீரகேரளம் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம், ஓராட்டுகுப்பை கிராமத்தில் வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரசிடென்ட் ரங்கசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்கள் பட்டா ரத்து செய்யப்படவில்லை என கூறி எனவே தங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை தங்களுக்கே தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு அந்த இடத்தை தங்களுக்கே வழங்க வேண்டும், வீடு கட்டுவதற்கும் உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்தனர். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்கள் குடும்பத்துடன் அப்பகுதியில் போராட்டம் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...