ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கபட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதாக கூறும் அதிகாரிகள் - பொதுமக்கள் மனு!

மதுக்கரை அடுத்த வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரசிடென்ட் ரங்கசாமி கூறுவதாகவும் அந்த நிலத்தை தங்களுக்கே தர வேண்டுமென பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: மதுக்கரை அருகே வீரகேரளம் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம், ஓராட்டுகுப்பை கிராமத்தில் வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரசிடென்ட் ரங்கசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்கள் பட்டா ரத்து செய்யப்படவில்லை என கூறி எனவே தங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை தங்களுக்கே தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு அந்த இடத்தை தங்களுக்கே வழங்க வேண்டும், வீடு கட்டுவதற்கும் உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்தனர். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்கள் குடும்பத்துடன் அப்பகுதியில் போராட்டம் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...