ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கபட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதாக கூறும் அதிகாரிகள் - பொதுமக்கள் மனு!

மதுக்கரை அடுத்த வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரசிடென்ட் ரங்கசாமி கூறுவதாகவும் அந்த நிலத்தை தங்களுக்கே தர வேண்டுமென பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: மதுக்கரை அருகே வீரகேரளம் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம், ஓராட்டுகுப்பை கிராமத்தில் வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரசிடென்ட் ரங்கசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்கள் பட்டா ரத்து செய்யப்படவில்லை என கூறி எனவே தங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை தங்களுக்கே தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு அந்த இடத்தை தங்களுக்கே வழங்க வேண்டும், வீடு கட்டுவதற்கும் உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்தனர். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்கள் குடும்பத்துடன் அப்பகுதியில் போராட்டம் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...