கோவையில் பா.ஜ.க சார்பில் 'தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை' விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

கோவையில் பா.ஜ.க சார்பில் தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் இன்று துவங்கியது.



கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இந்த பிரச்சார பயணமானது துவங்கியது. பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெறும் இந்த பிரச்சார பயணமானது இன்று துவங்கி வரும் 14ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கின்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்தும் நீர் நிலைகள் தூர்வாறுவதன் அவசியம் குறித்தும் இந்த பிரச்சார பயணத்தின் போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இந்த விழிப்புணர்வு பயணத்தின் முன்பாக வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மரம் நடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இந்த யாத்திரை துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்பட வேண்டும். மாநில அரசு நீர் நிலைகளை தூர்வார தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசிடம் தேவையான உதவிகளை பெற்றுத் தர தமிழக பா.ஜ.க உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்தார்.

இதனைத் தொடந்து பேசிய வானதி சீனிவாசன், கோவை மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சார பயணத்தின் போது நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், விழிப்புணர்வு பயணத்தின் போதே 10 லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று அதை தமிழக முதலமைச்சரிடம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரச்சார பயணத்தின் போது ஆங்காங்கே மரங்களும் நடுவதுடன், குளம், குட்டைகளை தூர்வாறும் பணிகளிலும் ஈடுபட இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இந்த பிரச்சார துவக்க விழா நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே வாகன அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்ற பாஜக-வினரின் வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...