கோவையில் பா.ஜ.க சார்பில் 'தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை' விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

கோவையில் பா.ஜ.க சார்பில் தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் இன்று துவங்கியது.



கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இந்த பிரச்சார பயணமானது துவங்கியது. பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெறும் இந்த பிரச்சார பயணமானது இன்று துவங்கி வரும் 14ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கின்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்தும் நீர் நிலைகள் தூர்வாறுவதன் அவசியம் குறித்தும் இந்த பிரச்சார பயணத்தின் போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இந்த விழிப்புணர்வு பயணத்தின் முன்பாக வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மரம் நடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இந்த யாத்திரை துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்பட வேண்டும். மாநில அரசு நீர் நிலைகளை தூர்வார தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசிடம் தேவையான உதவிகளை பெற்றுத் தர தமிழக பா.ஜ.க உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்தார்.

இதனைத் தொடந்து பேசிய வானதி சீனிவாசன், கோவை மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சார பயணத்தின் போது நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், விழிப்புணர்வு பயணத்தின் போதே 10 லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று அதை தமிழக முதலமைச்சரிடம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரச்சார பயணத்தின் போது ஆங்காங்கே மரங்களும் நடுவதுடன், குளம், குட்டைகளை தூர்வாறும் பணிகளிலும் ஈடுபட இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இந்த பிரச்சார துவக்க விழா நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே வாகன அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்ற பாஜக-வினரின் வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...