உடுமலையில் பிரதமர் மோடி சிலையை தத்ரூபமாக வடிவமைத்த மண்பாண்ட கலைஞருக்கு குவியும் பாராட்டு!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவுகூறும் விதமாக 'என் மண் என் மக்கள்'என்ற வாசகத்துடன் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் உருவாக்கியுள்ள உடுமலையை சேர்ந்த மண்பாண்ட கலைஞரான ரஜினி ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



திருப்பூர்: பிரதமர் மோடியின் களிமண் சிலையை உருவாக்கிய உடுமலையை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஜினி ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். மண்பாண்டக் கலைஞரான இவர் தீவிர ரஜினி ரசிகராவார். இதனால் ரஜினி ரஞ்சித் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

இவர் ஒவ்வொரு ரஜினி படம் தயாராகும் போதும் அந்த படத்தில் ரஜினியின் தோற்றத்தை களிமண் சிலையாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவுகூறும் விதமாக 'என் மண் என் மக்கள்'என்ற வாசகத்துடன் இந்திய பிரதமர் மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் உருவாக்கியுள்ளார்.

இதில் மோடி கையில் செங்கோல் ஏந்திய வண்ணம் காட்சியளிக்கிறார். வெறும் மண்பாண்டங்களை மட்டுமல்லாமல் அவ்வப்போது பிரபலமாகும் விஷயங்களை உருவமாக செய்யும் இந்த மண் பாண்டக்கலைஞருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன்ர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...