தாராபுரம் அருகே கோழி பண்ணையில் 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடிய காவலாளி கைது!

தாராபுரம் அடுத்த நாரணாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோழிப்பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்த செல்வராஜ், தனது நண்பருடன் சேர்ந்து, ஆட்டோ மூலம் 850 கிலோ அளவிலான கம்பிகளை திருடி சென்ற சம்பவம் தொடர்பாக காவலாளி செல்வராஜை கைது செய்த போலீசார், கூட்டாளி திருமலைசாமியை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் இருந்து 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் அருகேயுள்ள நாரணாபுரம் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை கட்டப்பட்டு வருகிறது. அங்கு நாரணாபுரம் மேற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் (56) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் செல்வராஜ் தனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த திருமலைசாமி என்பவருடன் சேர்ந்து இரவு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 850 கிலோ இரும்பு கம்பிகளை வாடகை ஆட்டோ மூலம் திருடி வந்துள்ளார்.

அப்போது அங்கு வேலை செய்து வந்த பரமத்தி வேலூரை சேர்ந்த கார்த்திக் (34) என்பவர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் நிர்வாகம் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கார்த்திக்கிடம் புகாரை பெற்ற தாராபுரம் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு கம்பியை வாகனத்துடன் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது செல்வராஜ், திருமலை சாமியுடன் 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். பிறகு போலீசார் செல்வராஜ் மற்றும் திருமலைசாமி இருவர் மீது வழக்குபதிவு செய்து செல்வராஜை மட்டும் கைது செய்தனர்.

மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய கூட்டாளி திருமலைசாமியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....