தாராபுரம் அருகே கோழி பண்ணையில் 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடிய காவலாளி கைது!

தாராபுரம் அடுத்த நாரணாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோழிப்பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்த செல்வராஜ், தனது நண்பருடன் சேர்ந்து, ஆட்டோ மூலம் 850 கிலோ அளவிலான கம்பிகளை திருடி சென்ற சம்பவம் தொடர்பாக காவலாளி செல்வராஜை கைது செய்த போலீசார், கூட்டாளி திருமலைசாமியை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் இருந்து 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் அருகேயுள்ள நாரணாபுரம் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை கட்டப்பட்டு வருகிறது. அங்கு நாரணாபுரம் மேற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் (56) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் செல்வராஜ் தனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த திருமலைசாமி என்பவருடன் சேர்ந்து இரவு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 850 கிலோ இரும்பு கம்பிகளை வாடகை ஆட்டோ மூலம் திருடி வந்துள்ளார்.

அப்போது அங்கு வேலை செய்து வந்த பரமத்தி வேலூரை சேர்ந்த கார்த்திக் (34) என்பவர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் நிர்வாகம் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கார்த்திக்கிடம் புகாரை பெற்ற தாராபுரம் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு கம்பியை வாகனத்துடன் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது செல்வராஜ், திருமலை சாமியுடன் 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். பிறகு போலீசார் செல்வராஜ் மற்றும் திருமலைசாமி இருவர் மீது வழக்குபதிவு செய்து செல்வராஜை மட்டும் கைது செய்தனர்.

மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய கூட்டாளி திருமலைசாமியை தேடி வருகின்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...