தாராபுரம் அருகே கோழி பண்ணையில் 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடிய காவலாளி கைது!

தாராபுரம் அடுத்த நாரணாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோழிப்பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்த செல்வராஜ், தனது நண்பருடன் சேர்ந்து, ஆட்டோ மூலம் 850 கிலோ அளவிலான கம்பிகளை திருடி சென்ற சம்பவம் தொடர்பாக காவலாளி செல்வராஜை கைது செய்த போலீசார், கூட்டாளி திருமலைசாமியை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் இருந்து 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் அருகேயுள்ள நாரணாபுரம் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை கட்டப்பட்டு வருகிறது. அங்கு நாரணாபுரம் மேற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் (56) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் செல்வராஜ் தனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த திருமலைசாமி என்பவருடன் சேர்ந்து இரவு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 850 கிலோ இரும்பு கம்பிகளை வாடகை ஆட்டோ மூலம் திருடி வந்துள்ளார்.

அப்போது அங்கு வேலை செய்து வந்த பரமத்தி வேலூரை சேர்ந்த கார்த்திக் (34) என்பவர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் நிர்வாகம் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கார்த்திக்கிடம் புகாரை பெற்ற தாராபுரம் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு கம்பியை வாகனத்துடன் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது செல்வராஜ், திருமலை சாமியுடன் 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். பிறகு போலீசார் செல்வராஜ் மற்றும் திருமலைசாமி இருவர் மீது வழக்குபதிவு செய்து செல்வராஜை மட்டும் கைது செய்தனர்.

மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய கூட்டாளி திருமலைசாமியை தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...