ஈஷா யோகா மையத்தில் குளித்த போது கல்லூரி மாணவர் பலி


கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இங்கே, மெர்க்குரி உள்ளிட்ட பாதரசங்களால் ஆன சிலை அடங்கிய சூரிய குண்டம் என்னும் நீராடும் பகுதியில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



திருவண்ணாமலை மாவட்டம், கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த மன்னார்சாமி என்பவரது மகன் ரமேஷ் (21). வேலூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் சிவில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சகமாணவர் அனைவரும் இணைந்து உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று காலை உதகை செல்லும் முன்பாக வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு, சூரிய குண்டம் என்னும் நீராடும் பகுதியில் மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்த நிலையில் ரமேஷ்-க்கு அதிகப்படியான குளிரின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், பொது மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது உயிரிழந்த மாணவரின் உடல் கோவை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலந்துரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலாவிற்காக ஈஷா யோகா மையத்திற்கு வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சகமாணவர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...