டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் பங்கேற்ற கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன்!

கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, டெல்லியில் உள்ள கியூபா நாட்டின் தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.


கோவை: டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூக்கின் அருகில் இருந்து கொண்டு சோசலிச செம்பதாகையை உயர்த்திப் பிடித்து வரும் தேசம் கியூபா . கொரானா பெருந்தொற்றின் போது 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது மருத்துவ குழுவை அனுப்பி சேவை ஆற்றிய நாடு.

தரமான கல்வி, தனிச்சிறப்பு மிக்க மருத்துவம் ஆகியவற்றை தனது குடிமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கி வரும் நாடு கியூபா. அத்தகைய சிறப்பு பெற்ற கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு இன்று புதுடெல்லியில் இந்தியாவிற்கான கியூபா தூதரகம் புரட்சி தின விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் நான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். இந்தியாவிற்கான கியூபா தூதர் அலெக்சாண்டரோ சிமன்காஸ் மாரீன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை இந்திய மக்களின் சார்பாக தெரிவித்தோடு, கியூபா நாட்டின் மீதான இந்திய மக்களின் நேசம் என்றென்றும் தொடரும் என்றும் தெரிவித்தேன்.



பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக கியூபா புரட்சி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் தோழர் சே குவேரா தலைமையில் நடைபெற்ற மகத்தான கியூப புரட்சி குறித்தும், அது கியூப சமூகத்தில் ஏற்படுத்திய அற்புதமான மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...