டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் பங்கேற்ற கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன்!

கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, டெல்லியில் உள்ள கியூபா நாட்டின் தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.


கோவை: டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூக்கின் அருகில் இருந்து கொண்டு சோசலிச செம்பதாகையை உயர்த்திப் பிடித்து வரும் தேசம் கியூபா . கொரானா பெருந்தொற்றின் போது 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது மருத்துவ குழுவை அனுப்பி சேவை ஆற்றிய நாடு.

தரமான கல்வி, தனிச்சிறப்பு மிக்க மருத்துவம் ஆகியவற்றை தனது குடிமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கி வரும் நாடு கியூபா. அத்தகைய சிறப்பு பெற்ற கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு இன்று புதுடெல்லியில் இந்தியாவிற்கான கியூபா தூதரகம் புரட்சி தின விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் நான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். இந்தியாவிற்கான கியூபா தூதர் அலெக்சாண்டரோ சிமன்காஸ் மாரீன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை இந்திய மக்களின் சார்பாக தெரிவித்தோடு, கியூபா நாட்டின் மீதான இந்திய மக்களின் நேசம் என்றென்றும் தொடரும் என்றும் தெரிவித்தேன்.



பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக கியூபா புரட்சி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் தோழர் சே குவேரா தலைமையில் நடைபெற்ற மகத்தான கியூப புரட்சி குறித்தும், அது கியூப சமூகத்தில் ஏற்படுத்திய அற்புதமான மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...