கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘விபத்திலிருந்து பாதுகாக்கும்’ மாதிரி பயிற்சி!

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விபத்திலிருந்து பாதுகாக்கும் மாதிரி பயிற்சி இன்று RTO அலுவலக பிரதான சாலை அருகே நடத்தப்பட்டது. இதில் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்பது மற்றும் உரிய சிகிச்சை அளித்து கண்காணிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.



கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் சமூக விழிப்புணர்வுக்காக "விபத்திலிருந்து பாதுகாக்கும்" மாதிரி பயிற்சி நடத்தப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் கோவை RTO அலுவலக பிரதான சாலை அருகே விபத்திலிருந்து பாதுகாக்கும் மாதிரி பயிற்சி நடத்தப்பட்டது. ஊழியர்களும், பொதுமக்களும் எதிர்பாராத சில விபத்துகளை சமாளிக்க இந்த மாதிரி பயிற்சி உதவும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இந்த பயிற்சியை நடத்துகிறது.

RTO அலுவலக பிரதான சாலைக்கு அருகில் வெளிப்புற விபத்து மாதிரி பயிற்சியை நடத்தியது. இந்த பயிற்சியில் 21 பயணிகளும், 1 ஓட்டுநரும் கலந்து கொண்டனர்.



இதில் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க மின் கம்பத்தில் மோதியது. மருத்துவக் குழு மற்றும் சேவை பணியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மருத்துவ அவசரகால உதவியாளர்களும் தயாராக இருந்தனர்.



அவசரநிலை ஏற்பட்டவுடன், வெளிப்புற அவசர நிலையை குறிக்க மருத்துவமனையில் "கோட் மஞ்சள்" (Code Yellow) அறிவிக்கப்பட்டது. அவசரகால குறியீடு மஞ்சளில் உள்ள ஐந்து குழுக்கள் விரைந்தன. 1. தள மீட்புக் குழு, 2.உள் சோதனைக் குழு, 3.கார்டன் குழு, 4.காப்புக் குழு மற்றும் 5.நோயாளி தகவல் மேலாண்மைக் குழு.



அவசரநிலை ஏற்பட்ட உடனே, தள மீட்புக் குழு விரைந்து நோயாளிகளுக்கு முதலுதவி செய்தது, மேலும், உயர் சிகிச்சை தேவைபடுவோருக்கு உயர் பாதுகாப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். நோயாளிகளை மீண்டும் பரிசோதித்து அவர்களை இடம் மாற்றியது.



மொத்தத்தில். 5 நோயாளிகள் சிவப்பு சிகிச்சை உயர் முன்னுரிமை பிரிவில் இருந்தனர். அவர்களில் இருந்து நான்கு பேர் ICU க்கு மாற்றப்பட்டனர், ஒருவர் US ஸ்கேன் முடித்த பின்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.



பாதிக்கப்பட்ட 8 பேர் மஞ்சள் சிகிச்சை கீழ் பிரிவில் பிரிக்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். பின் கண்காணிப்பிற்காக அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட 2 பேர் பச்சை பிரிவு பாதுகாப்பு சோதனையில் வைக்கப்பட்டார்கள் பின் உள்நோயாளிகளின் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட 4 பேரும் வழக்கமான சோதனைக்கு பிறகு அவசர நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 2 நோயாளிகள் கருப்பு சோதனை பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நம் கார்டன் குழுவின் உதவியுடன் மாற்றப்பட்டனர்.

மீட்பு குழு உறுப்பினர்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள நோயாளிகளை கவனித்து கொண்டனர். இந்த முழு மாதிரி பயிற்சியும் பதிவு செய்யப்பட்டது. ஊடகங்கள் இருந்தன.

இந்நிகழ்வில் போக்குவரத்துக்கு காவல்துறை துணை ஆணையர் கலந்து கொண்டார். பொதுமக்களிடையே பீதியோ, குழப்பமோ ஏற்படாத வகையில் இது ஒரு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி என்று சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. இந்த மாதிரி பயிற்சி வெற்றிகரமாக நடந்தது.

இந்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியின் நோக்கம், நடைமுறைகளின் செயல்களையும் மற்றும் உண்மையான அவசர நிலையின் போது ஏற்படும் பதட்டத்தை குறைக்க உதவும். இடையூறு ஏற்படாமல் உயிர்களையும் சுற்றுச்சூழலையும். பாதுகாப்பதே முதன்மையான எங்கள் மருத்துவமனையின் குறிக்கோள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு எந்த அவசர நெருக்கடியையும் சமாளிக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் சிறு காயங்கள் முதல் கடுமையான நோய்கள் வரை, ஒவ்வொரு நோயாளிக்கும் மிக உயர்ந்த கவனிப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...