பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி கோவையில் மனு தர்ம நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவர் மணியம்மை பிறந்த நாளை முன்னிட்டு, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள மனு தர்ம நூலை கொளுத்தும் போராட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.



இதன்படி அவ்வமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய மனு தர்ம நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், சமூக நீதி தத்துவத்திற்கு எதிராகவும், சாதி பிரிவினைகளை ஊக்குவிக்கும் வகையில் மனு தர்மம் உள்ளதாகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி மனு தர்ம நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...