நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து நச்சு புகை வெளியேற்றம் - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!

பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் செயல்பட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.



இந்த தார் தயாரிக்கும் தொழில்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் மனு அளித்துள்ளனர்.



இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் தார் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் இந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமானது என்கிற அதிர்ச்சி தகவலையும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, தற்போது வெளியாகியிருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் வெறும் நடிப்பிற்காக தானா? என கேள்வி எழுப்பினர்.

நச்சு புகையை வெளியேற்றும் தார் தொழிற்சாலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...