நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து நச்சு புகை வெளியேற்றம் - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!

பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் செயல்பட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.



இந்த தார் தயாரிக்கும் தொழில்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் மனு அளித்துள்ளனர்.



இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் தார் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் இந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமானது என்கிற அதிர்ச்சி தகவலையும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, தற்போது வெளியாகியிருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் வெறும் நடிப்பிற்காக தானா? என கேள்வி எழுப்பினர்.

நச்சு புகையை வெளியேற்றும் தார் தொழிற்சாலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...