உடுமலை திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுப்பதற்கு பல மாதங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கூடுதலாக வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் கூடுதல் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் வண்டல் மண் 34,000 கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுப்பதற்கு கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு எடுத்தது போக மீதமுள்ள 17,000 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கு பல மாதங்களுக்குப் பிறகு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கி உள்ளார்.



இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி கோரும் விவசாயிகள் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது.



வண்டல் மண் எடுக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவு போதுமானதாக இல்லை எனவே விவசாயிகள் நலன் கருதி திருமூர்த்தி அணையில் வண்டல் மண் கூடுதலாக எடுப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வண்டல் மண் அதிக அளவு எடுக்கும் பொழுது திருமூர்த்தி அணையில் கூடுதலான தண்ணீர் திறக்க முடியும். இதனால் பாசனத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...