உடுமலை திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுப்பதற்கு பல மாதங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கூடுதலாக வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் கூடுதல் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் வண்டல் மண் 34,000 கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுப்பதற்கு கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு எடுத்தது போக மீதமுள்ள 17,000 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கு பல மாதங்களுக்குப் பிறகு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கி உள்ளார்.



இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி கோரும் விவசாயிகள் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது.



வண்டல் மண் எடுக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவு போதுமானதாக இல்லை எனவே விவசாயிகள் நலன் கருதி திருமூர்த்தி அணையில் வண்டல் மண் கூடுதலாக எடுப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வண்டல் மண் அதிக அளவு எடுக்கும் பொழுது திருமூர்த்தி அணையில் கூடுதலான தண்ணீர் திறக்க முடியும். இதனால் பாசனத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...