உடுமலை திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுப்பதற்கு பல மாதங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கூடுதலாக வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் கூடுதல் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் வண்டல் மண் 34,000 கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுப்பதற்கு கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு எடுத்தது போக மீதமுள்ள 17,000 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கு பல மாதங்களுக்குப் பிறகு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கி உள்ளார்.



இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி கோரும் விவசாயிகள் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது.



வண்டல் மண் எடுக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவு போதுமானதாக இல்லை எனவே விவசாயிகள் நலன் கருதி திருமூர்த்தி அணையில் வண்டல் மண் கூடுதலாக எடுப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வண்டல் மண் அதிக அளவு எடுக்கும் பொழுது திருமூர்த்தி அணையில் கூடுதலான தண்ணீர் திறக்க முடியும். இதனால் பாசனத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...