கோவையில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் - ரயில்வே சங்கங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா!

தென்னக ரயில்வேக்கு வருவாயில் மூன்றாவது பெரிய பங்களிப்பை வழங்கும் கோயம்புத்தூரில் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அதற்காக தென்னக ரயில்வே பொது மேலாளர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ரயில்வே சங்கங்களின் கோரிக்கை விடுத்துள்ளன.


கோவை: கோவையில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த தென்னக ரயில்வே பொது மேலாளர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ரயில்வே சங்கங்களின் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவையில் புதிய ரயில்களை பராமரிப்பதற்கான பிட்லைன் மற்றும் ஸ்டேபிளிங் லைன் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை ரயில்வே வாரியம் மண்டல மற்றும் கோட்ட அதிகாரிகளிடம் கேட்கிறது. பராமரிப்பு வசதிகளில் உள்ள தடைகள் காரணமாக, கோயம்புத்தூரில் இருந்து புதிய ரயில்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த தடைகளை சமாளிக்க, தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம், இந்த உள்கட்டமைப்பை உருவாக்க கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் போத்தனூர் கூடுதல் பிட் லைன்கள், ஸ்டேபிளிங் லைன்கள் மற்றும் சில வசதிகளை முன்மொழிந்தது.

சேலம் கோட்டம், தெற்கு ரயில்வேயில் உள்ள தலைமையகத்துக்கு, விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக அனுப்பியது. இந்த திட்டத்திற்கான நிதி ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, ஓராண்டுக்குள் முடிக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூருக்கு அடுத்தபடியாக தென்னக ரயில்வேக்கு வருவாயில் மூன்றாவது பெரிய பங்களிப்பை வழங்கும் கோயம்புத்தூரில் உள்கட்டமைப்பை உருவாக்க தேவையான ஒப்புதலை உடனடியாக அனுப்புமாறு தென்னக ரயில்வே பொது மேலாளரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே சங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன.

இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை, செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில்களும், பெங்களூரு, சென்னை எழும்பூர், காரைக்கால், திருச்செந்தூர், போடிநாயக்கனூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய ரயில்களும் இயக்கப்படும்.

நகரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்வது முன்கூட்டியே திட்டமிட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவது ரயில்வேயின் பொறுப்பு.

கோவையை பொருத்தவரையில் எதிர்பார்ப்பது நியாயம். ஏனெனில் அந்த அளவிற்கு ரயில்வேக்கு மட்டுமே இல்லாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு வருமானத்தை கொடுக்கிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...