போலி ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்புவதாக கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் புகார்!

கட்சி தலைமை குறித்து அவதூறாக பேசுவதாக போலி ஆடியோவை வெளியிட்டு தம் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை காவல் ஆணையரிடம் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.



கோவை: போலி ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்புவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் நா.கார்த்திக். இவர் பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் கட்சி தலைமை, அமைச்சர்கள் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரை விமர்சித்து பேசுவதாக இருந்தது. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால். தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், இந்த ஆடியோவிற்கு கண்டனம் தெரிவித்து, போலி ஆடியோவை தயார் செய்து தன் மீது சிலர் அவதூறு பரப்புவதாக தெரிவித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:-

நான் தி.மு.க.வில் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளேன். மாநகராட்சி துணை மேயர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளேன்.

தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், கொள்கைக்கும் குந்தகம் ஏற்படாமல் தி.மு.க. தொண்டர்களையும், பொதுமக்களையும் அரவணைத்து செயல்படுகிறேன். கடந்த அதிமுக ஆட் சியின் போது என் மீது பொய்யாக 39 வழக்குகள் போட்டனர். அந்த வழக்குகளை சட்ட ரீதியாக சந்தித்து வருகிறேன்.

எனது பணிகளை கண்டு பொறாமைப்பட்டு சில சமூக விரோதிகள், நான் பேசியதாக போலி ஆடியோவை தயார் செய்து வதந்தி பரப்ப வெளியிட்டுள்ளனர். இந்த பொய்யான அவதூறான ஆடியோவை வெளியிட்ட சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...