மூலனூர் அருகேயுள்ள நடைபாதையை மீட்டுத்தரக்கோரி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசிக சார்பில் மனு!

தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் நடைபாதையை மீட்டு தரவும், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் நடைபாதையை மீட்டு தர வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணார் பாளையம் ஏசு வீதியில், பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை முத்துவேல் என்பவர், ஹாலோ பிளாக் கல்லால் காம்பவுண்ட் சுவர் எழுப்பி வலியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த பாதையை முத்துவேல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அடியாட்களை வைத்து பொதுமக்களை மிரட்டி வருவதாகவும், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் மூலனூர் சாணார் பாளையம், ஏசு வீதி ஆகிய பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தினால் அடிப்படை வசதிகள் எதுவும் பெற முடியாத சூழலில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



எனவே உடனடியாக தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது வழித்தடத்தை மீட்க வேண்டும் என்றும், அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...