மூலனூர் அருகேயுள்ள நடைபாதையை மீட்டுத்தரக்கோரி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசிக சார்பில் மனு!

தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் நடைபாதையை மீட்டு தரவும், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் நடைபாதையை மீட்டு தர வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணார் பாளையம் ஏசு வீதியில், பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை முத்துவேல் என்பவர், ஹாலோ பிளாக் கல்லால் காம்பவுண்ட் சுவர் எழுப்பி வலியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த பாதையை முத்துவேல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அடியாட்களை வைத்து பொதுமக்களை மிரட்டி வருவதாகவும், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் மூலனூர் சாணார் பாளையம், ஏசு வீதி ஆகிய பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தினால் அடிப்படை வசதிகள் எதுவும் பெற முடியாத சூழலில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



எனவே உடனடியாக தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது வழித்தடத்தை மீட்க வேண்டும் என்றும், அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...