வால்பாறை அரசு மருத்துவமனையில் சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு!

வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அமுல் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போதிய மருத்துவர்கள் இல்லை என வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு சென்று நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.



கோவை: வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மருத்துவர்கள் வேலை நேரங்களில் மருத்துவமனையில் உள்ளார்களா என்று ஆய்வு மேற்கொண்ட அவர், நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் வால்பாறையில் சிகிச்சைக்கு வரும் மக்களை பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்ப வேண்டாம்.



வால்பாறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



அப்போது வால்பாறை அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் மருத்துவமனை பணியாளர்கள் தேவை என்றும் மருத்துவர் மகேஷ் ஆனந்தி சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரிடம் இது சம்பந்தமாக புகார் தெரிவித்து வால்பாறை மருத்துவமனைக்கு அதிகப்படியான மருத்துவர்களையும் பணியாளர்களையும் நியமிக்க வலியுறுத்துவதாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இந்த ஆய்வின் போது நகர செயலாளர் மயில், பொன்.கணேசன், சுடர் பாலு, ஆடிட்டர் சண்முகவேல், எஸ்.கே.எஸ் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...