நிலத்தை அபகரித்ததாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தர்ணா!

கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று அபகரித்து கொண்டதாக கூறி, கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: தனது நிலத்தை அபகரித்து விட்டதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவர், கொண்டையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் எல்ஜிபி என்ற தனியார் நிறுவனம் மோசடி செய்து அபகரித்து விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க அழைத்து சென்றனர்.

இது குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது, இது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, தனது நிலம் குறித்து நடவடிக்கை எடுக்கும் படி அறிவித்த நிலையில், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது நிலத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...