நிலத்தை அபகரித்ததாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தர்ணா!

கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று அபகரித்து கொண்டதாக கூறி, கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: தனது நிலத்தை அபகரித்து விட்டதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவர், கொண்டையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் எல்ஜிபி என்ற தனியார் நிறுவனம் மோசடி செய்து அபகரித்து விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க அழைத்து சென்றனர்.

இது குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது, இது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, தனது நிலம் குறித்து நடவடிக்கை எடுக்கும் படி அறிவித்த நிலையில், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது நிலத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...