ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!

ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்கி வரும் ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப்பின் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புதிய தலைவராக சரவணன்,செயலாளராக ஜெயராம், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.



கோவை: ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி சார்பாக ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம்கள் என பல்வேறு சமூகம் நலம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2023-24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவை ரத்னா ரெசிடென்சி ஒட்டல் அரங்கில் நடைபெற்றது.



சார்ட்டர் பிரசிடெண்ட் மூத்த வழக்கறிஞர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்ட்டர் செக்ரட்டரி ராஜசேகர் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எமரால்டு ஜூவல் குழும நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், எதிர்கால மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் புதிய தலைவராக சரவணன்,செயலாளராக ஜெயராம், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

இதே போல ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் அமைப்பிற்கு ரூபாய் அறுபதாயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள், தீத்தீபாளையம் அரசு பள்ளியில் நூலகம் அமைப்பதற்கான புத்தகங்கள் மற்றும் அலமாரி, வழங்கப்பட்டது.



தொடர்ந்து ரோட்டரி கிளப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் இண்டஸ் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் நிர்வாகிகள் கனகராஜ், முகமது சபியுல்லா மற்றும் உப தலைவர் உமா பிரபு, பிரபுராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...