ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!

ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்கி வரும் ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப்பின் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புதிய தலைவராக சரவணன்,செயலாளராக ஜெயராம், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.



கோவை: ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி சார்பாக ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம்கள் என பல்வேறு சமூகம் நலம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2023-24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவை ரத்னா ரெசிடென்சி ஒட்டல் அரங்கில் நடைபெற்றது.



சார்ட்டர் பிரசிடெண்ட் மூத்த வழக்கறிஞர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்ட்டர் செக்ரட்டரி ராஜசேகர் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எமரால்டு ஜூவல் குழும நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், எதிர்கால மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் புதிய தலைவராக சரவணன்,செயலாளராக ஜெயராம், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

இதே போல ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் அமைப்பிற்கு ரூபாய் அறுபதாயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள், தீத்தீபாளையம் அரசு பள்ளியில் நூலகம் அமைப்பதற்கான புத்தகங்கள் மற்றும் அலமாரி, வழங்கப்பட்டது.



தொடர்ந்து ரோட்டரி கிளப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் இண்டஸ் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் நிர்வாகிகள் கனகராஜ், முகமது சபியுல்லா மற்றும் உப தலைவர் உமா பிரபு, பிரபுராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...