சட்டக் கல்லூரியில் திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் - கோவையில் திருநங்கை பிரனிஷ்கா கோரிக்கை!

கோவை தித்திப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரனிஷ்கா என்ற திருநங்கை சட்டக்கல்லூரில் படிக்க விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறிய அவர் சட்டக் கல்லூரியில் திருநங்கைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: சட்டக் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த திருநங்கை பிரனிஷ்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை தித்திப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ன முனியாண்டி, சரஸ்வதி தம்பதியினரின் மகளான திருநங்கை பிரனிஷ்கா. இவர், தித்திப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்தார்.



இவருக்கு சட்டம் படிக்க விருப்பம். இதையடுத்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதம் சட்டம் படிக்க வேண்டி விண்ணப்பித்தார்.

ஆனால், அவருக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. தனது மனுவை நிராகரிக்கப்பட்டதாக கருதிய நிலையில், கோவைக்கு வந்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரனிடம் மனு வழங்கினார்.

இது குறித்து பிரனிஷ்கா கூறியதாவது,



திருநங்கைகள் பல்வேறு துறையில் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டி விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. என் விண்ணப்பித்தை நிராகரித்து விட்டதாக நினைக்கிறேன்.

இதனால், எனக்கு சட்டம் படிக்க உதவி செய்ய வேண்டும். திருநங்கைகளுக்கு தனியாக சட்டக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரிடம் மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...