தாராபுரத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது!

தாராபுரம் அடுத்த பச்சாம்பாளையம் பகுதியில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிச் சென்ற தாராபுரம் சர்க்கரை மில் பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(22), சூர்யா பிரகாஷ்(20), ஹனுமந்தபுரத்தைச் சேர்ந்த கோபிநாத்(23) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செல்போன் திருடிய வழக்கில் 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த பச்சாம்பாளையம் அருகேயுள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் தேவேந்திரன்(30). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 15-ஆம் தேதி இரவு, வேலை முடிந்து வந்த பின், வீட்டுக்கு வெளியே தூங்கி உள்ளார்.

அப்போது, அங்கு வந்த சிலர் தேவேந்திரனின் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், தேவேந்திரனின் செல்போனை தாராபுரம் சர்க்கரை மில் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் தமிழரசன்(22), குப்புசாமி மகன் சூர்யா பிரகாஷ்(20), ஹனுமந்தபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் கோபிநாத்(23) ஆகிய மூவரும் சேர்ந்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...