தாராபுரத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது!

தாராபுரம் அடுத்த பச்சாம்பாளையம் பகுதியில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிச் சென்ற தாராபுரம் சர்க்கரை மில் பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(22), சூர்யா பிரகாஷ்(20), ஹனுமந்தபுரத்தைச் சேர்ந்த கோபிநாத்(23) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செல்போன் திருடிய வழக்கில் 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த பச்சாம்பாளையம் அருகேயுள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் தேவேந்திரன்(30). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 15-ஆம் தேதி இரவு, வேலை முடிந்து வந்த பின், வீட்டுக்கு வெளியே தூங்கி உள்ளார்.

அப்போது, அங்கு வந்த சிலர் தேவேந்திரனின் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், தேவேந்திரனின் செல்போனை தாராபுரம் சர்க்கரை மில் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் தமிழரசன்(22), குப்புசாமி மகன் சூர்யா பிரகாஷ்(20), ஹனுமந்தபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் கோபிநாத்(23) ஆகிய மூவரும் சேர்ந்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...