காய்கறி விலை உயர்வை கண்டித்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்!

காய்கறி விலை உயர்வை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தக்காளி, கத்திரிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு காய்கறிகள் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: காய்கறி விலை உயர்வை கண்டித்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் காய்கறிகளான தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருவமழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காய்கறி விலை உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வலைத்தளவாசிகள் மீம்ஸ் மற்றும் காமெடி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழக அரசு காய்கறி விலையை கட்டுப்படுத்தவும் மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும் பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தக்காளி, கத்திரிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...