உடுமலை அருகேயுள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை!

உடுமலை அடுத்த நரசிங்காபுரத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், சுமார் ஒரு கோடி மதிப்பிலான இயந்திரங்கள், தென்னை மட்டைகள் மற்றும் டிராக்டர்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் மைவாடி ஊராட்சி நரசிங்காபுரத்தில், கன்னிமுத்து என்பருக்கு சொந்தமான, சுஷ்மா தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.



இந்த தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.



தென்னை மட்டைகளில் ஏற்பட்ட தீ காற்றின் வேகத்தால் மளமளவென பரவி, தென்னை நார் தொழிற்சாலை முழுவதுமாக தீயில் எரிந்து சேதமானது.



இதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான இயந்திரங்கள், தென்னை மட்டைகள் மற்றும் டிராக்டர்கள் தீயில் எரிந்து சேதமாகின.



தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள், ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



முன்னதாக அருகிலுள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட தீ தென்னை நார் தொழிற்சாலைக்கும் பரவியதாக கூறப்படுகிறது.



காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...