சூலூரில் கஞ்சா விற்பனை - வடமாநில தொழிலாளி கைது!

சூலூர் அடுத்த காங்கேயம்பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பீகார் மாநிலம் முசாபர் பூர் பகுதியை சேர்ந்த சிவ்குமார் சகானி என்பவரை கைது செய்து, சூலூர் போலீசார் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: சூலூர் அடுத்த காங்கேயம் பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வடமாநில தொழிலாளி ஒருவரை சூலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பீகார் மாநிலம் முசாபர் பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சகானி என்பவரது மகன் சிவ்குமார் சகானி (35). இவர் தற்போது காங்கேயம் பாளையம் மெத்தை வீடு வீதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஏழு வருடங்களாக காங்கேயம் பாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் காங்கேயம் பாளையத்தில் சிவ்குமார் சஹானி கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் காங்கேயம் பாளையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிவ்குமார் சகானி காங்கேயம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.



அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை மறைவிடத்திலிருந்து பறிமுதல் செய்தனர்.



இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமார் சகானியை கைது செய்தனர். மேலும் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...