தமிழ்நாடு தின விழா - தமிழ் மொழியை காக்க வலியுறுத்தி பூலாங்கிணறு அரசுப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்!

தமிழ்நாடு தின விழாவை முன்னிட்டு உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியை காக்க வலியுறுத்தி வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு முழக்கங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: தமிழ்நாடு தின விழாவை முன்னிட்டு உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியை காக்க வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நா.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொழிற்கல்வி ஆசிரியர் கே.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

நாட்டின் நலப்பணி சட்ட அலுவலர் செ.சரவணன் வரவேற்புரை ஆற்றினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் என்.சந்திரன் தமிழ்நாடு தோன்றிய வரலாறு என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.



அப்போது அவர் பேசியதாவது, தமிழ் மொழியை பாதுகாக்க ஒவ்வொருவரும் தாய் மொழியை பேச வேண்டும். பிற மொழிகள் கலந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். தமிழ் மொழி வளர தமிழில் புதிய புதிய சொற்களை உருவாக்க வேண்டும். அவற்றை கண்டறிந்து பேச வேண்டும்.

பழைய சொற்களையும் தமிழ் உணர்வோடு பயன்படுத்த வேண்டும். தமிழ் மொழியை நாம் பயன்படுத்தினால் தான், நம் தாய்மொழி வளரும் தாய் மொழி பற்று அனைவருக்கும் தேவை.

தமிழ்நாடு என்ற பெயர் அமைய காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்த செய்திகளையும் எடுத்துக் கூறினார்.



இதனையடுத்து, மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலமானது, பூலாங்கிணறு, கென்னடி நகர், முத்து நகர், அண்ணா நகர் முதலான பகுதிகளில் தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க, தமிழ் போற்றுவோம் என்று கோஷங்களை இட்டவாறு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...