உடுமலையில் பாஜக நிர்வாகிகள் இருவரிடையே மோதல் - ஒருவருக்கு மண்டை உடைந்தது!

உடுமலை அடுத்த கோமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான அருண் பிரசாத்தை ஒரு கும்பல் தாக்கி மண்டையை உடைத்த நிலையில், இதற்கு உடுமலை ஊராட்சி ஒன்றிய பாஜக கவுன்சிலர் நாகமாணிக்கம் தான் காரணம் எனக்கூறி அவரது வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: உடுமலை அருகே பாஜக நிர்வாகிகள் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு மண்டை உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே பொள்ளாச்சி வட்டத்துக்கு உட்பட்ட கோமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத்.



இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஐடி விங்கில் பொறுப்பில் இருப்பதாக கூறி கேரளா செல்லும் மணல் லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளார்.

தமிழகத்தின் கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதாக புகார் அளித்துள்ளார். ஆனால் முறையான ஆவணங்களுடன் தான் வாகனங்கள் செல்கிறது என அதிகாரிகள் தரப்பு கூறி வருகின்றனர். மேலும் பாஜக நிர்வாகிகளே சிலர் பணம் பெற்றுக் கொண்டு கேரளா செல்லும் லாரிகளை தடுப்பதில்லை என அருண் பிரசாத் புகார் அளித்துள்ளார்.

பல பாஜக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.



இது குறித்த மோதலால் உடுமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், உடுமலை வடக்கு மண்டல தலைவராகவும் உள்ள நாகமாணிக்கம் மற்றும் அருண் பிரசாத்துக்கு பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது.

தகாத வார்த்தைகளால் இருவரும் செல்போனில் பேசி சண்டை போட்டுள்ளனர் இந்நிலையில் ஒரு கும்பல் உடுமலையில் அருண் பிரசாத்தை தாக்கி மண்டையை உடைத்தது. இதற்கு நாகமாணிக்கம் தரப்பினர் தான் காரணம் எனக்கூறி நாகமாணிக்கம் வீட்டுக்கு சென்ற அருண்பிரசாத் கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.



இதனை தொடர்ந்து உடுமலை காவல் நிலையத்துக்கு வந்த நாகமாணிக்கம் ஆதரவாளர்கள் அருணை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அருண் பிரசாத் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களது மோதலை விசாரித்த உடுமலை காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அந்தந்த பாஜக நிர்வாகிகள் எவ்வளவு கமிஷன் வாங்கினார்கள் என்பது குறித்த ஆடியோவும், தகாத வார்த்தைகளில் பேசிய அருண் பிரசாத் நாகமாணிக்கம் பேசிய ஆடியோவும் சமூக வளைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருவதால் உடுமலை பாஜக நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...