எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் - திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு!

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க பெங்களூருவுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர்.



திருப்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவிரி பிரச்சனையில் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், பெங்களூரு சென்றுள்ள தமிழக முதல்வர் இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பாமல் கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் அரசோடு இணக்கமாக செயல்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



திமுக அரசின் இரட்டை வேடம் மற்றும் அதன் தலைவர்களின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பாஜகவினர் இன்று கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

மத்திய அரசில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் இரு மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீரை சம பங்கீடாக வழங்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகத்திற்கு 177 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கிறது.

நடந்து முடிந்த கர்நாடக மாநில தேர்தலில் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அதற்காக ஒன்பதாயிரம் கோடி ஒதுக்குவோம் என தேர்தல் வாக்குறுதியிலேயே காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல், இன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசாமல் கூட்டணி என்ற பெயரில் தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசோடு இணக்கம் காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதே நிலை தொடருமானால் வீதிகளில் இறங்கி பாஜக போராடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...