வெள்ளகிணர் அருகே ரூ.186.34 லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்கும் பணி - அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்!

துடியலூர் அடுத்த வெள்ளகிணர் பகுதியில் ரூ.186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, அப்பகுதியில் வரும் 2 நகர பேருந்துகளை 4ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.



கோவை: துடியலூர் அடுத்த வெள்ளகிணர் பகுதியில் ரூ.186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

கோவை துடியலூர் அருகேயுள்ள வெள்ளகிணர் பகுதி 2-ல் மாநகராட்சியில் 1, 2, 26, 27 மற்றும் 28 ஆகிய வார்டுகளில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பகுதி செயலாளர் அருள்குமார் தலைமையில் நடந்த பூமிபூஜை நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், அவுசிங் யூனிட் பகுதி 2க்கு ஏற்கனவே வந்து கொண்டிருந்த நான்கு டவுன் பஸ்சில் தற்போது இரண்டு தான் வருவதாகவும், அதுவும் முக்கிய நேரங்களில் வருவதில்லை என்றும் பள்ளி மாணவர்கள் வசதிக்காக டவுன்பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், ஆணையாளர் பிரதாப், மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், பகுதி கழக செயலாளர் சிவா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் ஆறுகுட்டி, மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி அருள்குமார், கற்பகம் ராஜசேகர், சித்ரா தங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து, அம்பிகா தனபால், சித்ரா வெள்ளியங்கிரி, கண்ணகி ஜோதிபாசு, நிர்வாகிகள் முன்னால் அவைத் தலைவர் வெ.நா.பழனியப்பன், பகுதி கழக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், இராக்கிமுத்து, அருண், சம்பத், தன்ராஜ் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சுப்ரமணியன், ரம்யா, வட்டக் கழக செயலாளர்கள் இராஜசேகரன், சண்முகம், சோமசுந்தரம், சுந்தரம். மற்றும் வட்டக் கழக பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...