உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் உயிரிழந்த சோகம்!

நேற்றைய தினம் காலை 7.40 மணிக்கு சென்னை ரயிலில் உறங்கிக் கொண்டு வந்த நபர், உடுமலை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட நிலையில், திடீரென குதித்ததால், தவறி விழுந்து, ரயிலுக்கு அடியில் சிக்கி உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர் உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 7.40 மணிக்கு சென்னை ரயில், உடுமலை ரயில் நிலையத்திற்கு வந்து நின்று புறப்பட்டு சென்றது. அப்போது, ரயில் புறப்பட்ட நிலையில் ரயிலில் இருந்த நபர் ஒருவர், திடீரென வெளியே குதித்துள்ளார். இதனிடையே, அவர் நிலை தடுமாறில் ரயில் சக்கரத்தில் சிக்கிய நிலையில், உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயிலின் கடைசி பெட்டியில் பயணித்த அந்த நபர் உடுமலையை சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டு வந்தவர் திடீரென உடுமலை ரயில் நிலையத்தை பார்த்தவுடன் தூக்க கலக்கத்தில் வெளியே குதித்துள்ளார்.

அப்போது ரயில் சிறிது வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகிய நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து, பழனியில் இருந்து வந்த ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...