உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் உயிரிழந்த சோகம்!

நேற்றைய தினம் காலை 7.40 மணிக்கு சென்னை ரயிலில் உறங்கிக் கொண்டு வந்த நபர், உடுமலை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட நிலையில், திடீரென குதித்ததால், தவறி விழுந்து, ரயிலுக்கு அடியில் சிக்கி உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர் உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 7.40 மணிக்கு சென்னை ரயில், உடுமலை ரயில் நிலையத்திற்கு வந்து நின்று புறப்பட்டு சென்றது. அப்போது, ரயில் புறப்பட்ட நிலையில் ரயிலில் இருந்த நபர் ஒருவர், திடீரென வெளியே குதித்துள்ளார். இதனிடையே, அவர் நிலை தடுமாறில் ரயில் சக்கரத்தில் சிக்கிய நிலையில், உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயிலின் கடைசி பெட்டியில் பயணித்த அந்த நபர் உடுமலையை சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டு வந்தவர் திடீரென உடுமலை ரயில் நிலையத்தை பார்த்தவுடன் தூக்க கலக்கத்தில் வெளியே குதித்துள்ளார்.

அப்போது ரயில் சிறிது வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகிய நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து, பழனியில் இருந்து வந்த ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...