கோவை நல்லாயன் துவக்க பள்ளியில் மாணவர் தேர்தல் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாக்களித்தார்!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் பல்வேறு பதவிகளுக்கான பள்ளி மாணவர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், மாணவர்களுடன் சேர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணி அம்மாளும் மாணவர்களுக்கு வாக்களித்தார்.



கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.



கோவை கோட்டைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான நல்லாயன் துவக்க பள்ளியில் பள்ளி மாணவர் தேர்தல் இன்று நடைபெற்றது.



இப்பள்ளியில் வருடம் தோறும் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெறும். இதில் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு பொறுப்பிற்கும் போட்டியிடுவர்.



தேர்தலில் நடைபெறும் முறைப்படியே, வாக்களிப்பு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள், பதவியேற்பு போன்றவை நடைபெறும். அதன்படி இன்றைய தினம் வாக்களிப்பு நடைபெற்றது. இதற்கென கணினி மயமாக்கப்பட்ட வாக்களிப்பு இடம் அமைக்கப்பட்டு மாணவர்கள் வாக்களித்தனர்.



இதனை பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையிட்டனர். இந்த வருடம் பள்ளி தலைவர், துணைத் தலைவர், உணவுத் தலைவர், விளையாட்டு தலைவர், சுற்றுச்சூழல் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தலா மூன்று பேர் போட்டியிடுகின்றனர். இதற்கென ஒவ்வொருவருக்கும் தனித்தனி சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த மாணவர் தேர்தலில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணி அம்மாள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி செயல் அதிகாரி சுமதி ஆகியோரும் வாக்களித்தனர். மேலும் மாணவர்களுடனும் இது குறித்து கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...