கவனக்குறைவாக சிகிச்சையளித்தால் ஒருவர் பலி - பல்லடம் அருகே செயல்பட்டு வரும் அக்குபஞ்சர் சென்டர் முற்றுகை!

பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் இருதய சிகிச்சைக்காக வந்த சம்பத் என்பவருக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக கூறி, அவர்களது உறவினர்கள் அக்குபஞ்சர் சென்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் கவனக்குறைவாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரிஷி அக்குபஞ்சர் சென்டர் என்ற மினி கிளினிக் ஒன்று கடந்த ஒராண்டிற்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த அக்குபஞ்சர் சென்டரில் பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பட்டேல் சாலை பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் இருதய அடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இதற்கு காரணம் இந்த மருத்துவர் ரிஷி என்ற சித்தார்த்தன் என்பவர் அஜாக்கிரதையான முறையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இறந்த சம்பத் (55) என்பவருக்கு ஆஞ்சியோ செய்த பிறகு சிகிச்சை கொடுத்ததாகவும், ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யாமல் போன் கூட எடுக்காமல் வெளிமாநிலத்தில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

அதனை நம்பி அவரும் காத்திருந்தததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுதொடர்பான பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...