தாராபுரம் நகராட்சி கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

தாராபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில், தெரிவிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கான கோரிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தாராபுரம் நகராட்சி வளர்ச்சிக்கான கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி வளர்ச்சி பணிகள் தேர்வு செய்வதற்கான கவுன்சிலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில். துணை தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் எஸ்.எம்.பாரிஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது, தாராபுரம் நகராட்சி பகுதியில் சாக்கடை, சாலை வசதி மற்றும் குடிநீர் திருமணமண்டபங்கள் கட்டுவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க அரசிடமிருந்து ரூ. 25 கோடி தேவைப்படும் என்று நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை மனதில் கொண்டு கூடிய விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும் தாராபுரம் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி வளர்ச்சிக்கு உதவியாக இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறியதாவது,



நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு இதுவரை ரூ.12 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு வளர்ச்சி பணிகள் நகராட்சியில் செய்யப்பட்டுள்ளது.

20 ஆண்டுகால கோரிக்கையாக நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மக்கள் பணியை இரவு பகல் பாராமல் உழைக்கும் எங்களுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவுன்சிலருக்கு ரூ. 5000, துணைத் தலைவர் ரூ.10,000, தலைவருக்கு ரூ 15,000 மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் நகரா வளர்ச்சிக்காக ரூ 25 கோடி நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை கூடிய விரைவில் அமைச்சர் பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஹெடெக் அன்பழகன், முபாரக் அலி, சீனிவாசன், சக்திவேல், தேவி அபிராமி, உஷா பானு நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...