தாராபுரம் நகராட்சி கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

தாராபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில், தெரிவிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கான கோரிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தாராபுரம் நகராட்சி வளர்ச்சிக்கான கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி வளர்ச்சி பணிகள் தேர்வு செய்வதற்கான கவுன்சிலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில். துணை தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் எஸ்.எம்.பாரிஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது, தாராபுரம் நகராட்சி பகுதியில் சாக்கடை, சாலை வசதி மற்றும் குடிநீர் திருமணமண்டபங்கள் கட்டுவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க அரசிடமிருந்து ரூ. 25 கோடி தேவைப்படும் என்று நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை மனதில் கொண்டு கூடிய விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும் தாராபுரம் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி வளர்ச்சிக்கு உதவியாக இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறியதாவது,



நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு இதுவரை ரூ.12 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு வளர்ச்சி பணிகள் நகராட்சியில் செய்யப்பட்டுள்ளது.

20 ஆண்டுகால கோரிக்கையாக நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மக்கள் பணியை இரவு பகல் பாராமல் உழைக்கும் எங்களுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவுன்சிலருக்கு ரூ. 5000, துணைத் தலைவர் ரூ.10,000, தலைவருக்கு ரூ 15,000 மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் நகரா வளர்ச்சிக்காக ரூ 25 கோடி நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை கூடிய விரைவில் அமைச்சர் பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஹெடெக் அன்பழகன், முபாரக் அலி, சீனிவாசன், சக்திவேல், தேவி அபிராமி, உஷா பானு நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...