கோவையில் ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், சாலை பாதுகாப்புப் பணியினை மேம்படுத்துவது சம்பந்தமாகவும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வு, மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவையில் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு போக்குவரத்துக் கழகம், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக பொது பயன்பாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விதிமுறைகள் சார்ந்த புத்தாக்க பயிற்சி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களை உயிர் அமைப்புடன், மாவட்ட நிர்வாகம் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய துறைகள் இணைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...