வால்பாறை அருகே ஆனைமலை கிளப் கட்டிடத்தை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பரபரப்பு!

வால்பாறை அடுத்த பாரலை எஸ்டேட் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய 6 காட்டு யானைகள் அதிகாலை ஆனைமலை கிளப் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டிடத்தின் ஜன்னல் கதவு போன்றவை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: வால்பாறை அருகேயுள்ள ஆனைமலை கிளப் கட்டிடத்தை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் தனியாகவும் கூட்டமாகவும் ஆங்காங்கே பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வருகிறது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டின் ஜன்னல் கதவு, சத்துணவு மையம், மளிகை கடைகள், போன்றவர்களை உடைத்து சேதப்படுத்தி உள் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள் அதிகாலை 3 மணியளவில் பாரலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஆனைமலை கிளப் பகுதிக்குள் நுழைந்து கட்டிடத்தின் ஜன்னல் கதவு போன்றவை உடைத்து சேதப்படுத்தியது.



மேலும், கண்ணாடி ஜன்னலை உடைத்தும், இருப்பு அறை மற்றும் சமையல் அறை தங்கும் அறை போன்றவற்றின் ஜன்னல், கதவு போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியது.



அப்போது, இரவு பணியில் இருந்த வேல்சாமி மற்றும் சின்னப்பராஜ் ஆகியோர் மேற்கூறையில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.



இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதியில் விரட்டினர்.

காட்டு யானைகளின் நடமாட்டம் துவங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...