கீரணத்தம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ செவிலியர் வீட்டின் ஜன்னலை உடைத்து 80 சவரன் கொள்ளை - பரபரப்பு!

கீணரத்தம் அருகே ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏழிசை என்பவர், வெளியூருக்கு சென்ற நிலையில், அவரது, வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கீணரத்தம் அருகே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் செவிலியர் வீட்டின் ஜன்னலை உடைத்து 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கீரணத்தம் அடுத்த வி.ஐ.பி நகர் பகுதியை சேர்ந்தவர் அகிலன். இவரது மனைவி ஏழிசை வல்லபி (62), இவர் இந்திய இராணுவத்தில் செவிலியராக பணியாற்றி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரது கணவர் அகிலன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்துள்ளார். ஏழிசை தனது மகன் சுந்தரவேலன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஏழிசை மேட்டுப்பாளையத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மகன் வேலை காரணமாக பொள்ளாச்சிக்கும், மருமகள் அவரது தாய் வீட்டிற்கும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பணி முடிந்து கடந்த 10 ஆம் தேதி மகன் சுந்தரவேலன் வீட்டிற்கு வந்த போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஏழிசைக்கு தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த ஏழிசை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான 80 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயவியல் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...