கீரணத்தம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ செவிலியர் வீட்டின் ஜன்னலை உடைத்து 80 சவரன் கொள்ளை - பரபரப்பு!

கீணரத்தம் அருகே ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏழிசை என்பவர், வெளியூருக்கு சென்ற நிலையில், அவரது, வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கீணரத்தம் அருகே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் செவிலியர் வீட்டின் ஜன்னலை உடைத்து 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கீரணத்தம் அடுத்த வி.ஐ.பி நகர் பகுதியை சேர்ந்தவர் அகிலன். இவரது மனைவி ஏழிசை வல்லபி (62), இவர் இந்திய இராணுவத்தில் செவிலியராக பணியாற்றி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரது கணவர் அகிலன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்துள்ளார். ஏழிசை தனது மகன் சுந்தரவேலன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஏழிசை மேட்டுப்பாளையத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மகன் வேலை காரணமாக பொள்ளாச்சிக்கும், மருமகள் அவரது தாய் வீட்டிற்கும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பணி முடிந்து கடந்த 10 ஆம் தேதி மகன் சுந்தரவேலன் வீட்டிற்கு வந்த போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஏழிசைக்கு தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த ஏழிசை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான 80 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயவியல் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...