தடாகம் அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழப்பு - வனத்துறை விசாரணை!

தடாகம் அடுத்த நாத்துக்காடு பகுதியில் வனத்துறை களப்பணியாளர்கள் ரோந்து பணியின் போது, 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்துள்ளது. தகவலின் பேரில் வனத்துறையினர் யானையின் இறப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தடாகம் அடுத்த நாத்துக்காடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் வடக்கு சுற்று பகுதியில் உள்ள தடாகம் காப்பு காட்டிற்கு உட்பட்ட நாத்துக்காடு என்ற பகுதியில் இன்று வனத்துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது தடாகம் காப்பு காட்டில் இருந்து சுமார் பத்து மீட்டர் தொலைவில் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.



தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் இறந்து கிடந்தது சுமார் 20 வயதுள்ள பெண்யானை என்பது தெரியவந்தது. மேலும் யானை இறந்து சில தினங்கள் ஆகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...