தடாகம் அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழப்பு - வனத்துறை விசாரணை!

தடாகம் அடுத்த நாத்துக்காடு பகுதியில் வனத்துறை களப்பணியாளர்கள் ரோந்து பணியின் போது, 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்துள்ளது. தகவலின் பேரில் வனத்துறையினர் யானையின் இறப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தடாகம் அடுத்த நாத்துக்காடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் வடக்கு சுற்று பகுதியில் உள்ள தடாகம் காப்பு காட்டிற்கு உட்பட்ட நாத்துக்காடு என்ற பகுதியில் இன்று வனத்துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது தடாகம் காப்பு காட்டில் இருந்து சுமார் பத்து மீட்டர் தொலைவில் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.



தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் இறந்து கிடந்தது சுமார் 20 வயதுள்ள பெண்யானை என்பது தெரியவந்தது. மேலும் யானை இறந்து சில தினங்கள் ஆகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...