காய்கறி விலை உயர்வால் வெறிச்சோடி காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட்!

தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், காய்கறிகள் வாங்க வாடிக்கையாளர்கள் வராததால், எப்போது கூட்டமாக காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.



கோவை: தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வின் காரணமாக வாடிக்கையாளர்கள் வராததால், உக்கடம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.



கடந்த சில தினங்களாக பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய காய்கறிகளின் வரத்து குறைவானதால் பல்வேறு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.



குறிப்பாக தக்காளி சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.



அது மட்டுமின்றி இஞ்சி பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து உள்ளதால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போதைய விலை நிலவரத்தின் படி தக்காளி கிலோ 100 ரூபாய், ஆப்பிள் தக்காளி 120, சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய், பூண்டு கிலோ 180 ரூபாய், இஞ்சி கிலோ 260 ரூபாய், கேரட் கிலோ 60, பீட்ரூட் கிலோ 40, கத்தரிக்காய் கிலோ 50, உருளைக்கிழங்கு கிலோ 30, முருங்கைக்காய் கிலோ 50, பெரிய வெங்காயம் கிலோ 25 என விற்பனை செய்யப்படுகிறது.

அன்றாட சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி ஆகியவற்றின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

தக்காளியின் விலை முந்தைய நாட்களை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...