பல்லடம் அருகே கோழிக்கழிவில் விஷம் வைத்து 60 நாய்களை கொன்ற இறைச்சி கடை உரிமையாளர் கைது!

பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் கோழிக்கழிவில் விஷம் கலந்து வீசி வீட்டு வளர்ப்பு நாய்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நாய்கள் பலியான சம்பவத்தில் இறைச்சி கடை உரிமையாளர் பாலு என்பவரை பல்லடம் போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே 60 நாய்களை விஷம் வைத்து கொலை செய்த இறைச்சி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளான 60க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன.



இதனால் நாய்களை வளர்த்து வந்த பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நாய்கள் இறப்பிற்கான காரணம் குறித்து அப்பகுதியினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் குடியிருந்து கொண்டு கரைப்புதூர் லட்சுமி நகரில் இறைச்சி கடைகள் மற்றும் உணவகம் நடத்தி வரும் பாலு என்பவர் தான் வளர்த்து வரும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து காயப்படுத்தி வந்துள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது கடை அருகே உள்ள கோழி இறைச்சி கடைக்குச் சென்று அங்கு வீணாகும் கோழி கழிவுகளை வாங்கி வந்து அதில் விஷம் கலந்து அவற்றை குப்பைகளில் வீசி சென்றதும், இதனை உட்கொண்ட வளர்ப்பு நாய்கள் அடுத்தடுத்து பலியானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் நாய்களை விஷம் வைத்து கொன்ற வழக்கில் பாலுவை கைது செய்துள்ளனர்.

வளர்ப்பு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...