பல்லடம் அருகே கோழிக்கழிவில் விஷம் வைத்து 60 நாய்களை கொன்ற இறைச்சி கடை உரிமையாளர் கைது!

பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் கோழிக்கழிவில் விஷம் கலந்து வீசி வீட்டு வளர்ப்பு நாய்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நாய்கள் பலியான சம்பவத்தில் இறைச்சி கடை உரிமையாளர் பாலு என்பவரை பல்லடம் போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே 60 நாய்களை விஷம் வைத்து கொலை செய்த இறைச்சி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளான 60க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன.



இதனால் நாய்களை வளர்த்து வந்த பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நாய்கள் இறப்பிற்கான காரணம் குறித்து அப்பகுதியினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் குடியிருந்து கொண்டு கரைப்புதூர் லட்சுமி நகரில் இறைச்சி கடைகள் மற்றும் உணவகம் நடத்தி வரும் பாலு என்பவர் தான் வளர்த்து வரும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து காயப்படுத்தி வந்துள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது கடை அருகே உள்ள கோழி இறைச்சி கடைக்குச் சென்று அங்கு வீணாகும் கோழி கழிவுகளை வாங்கி வந்து அதில் விஷம் கலந்து அவற்றை குப்பைகளில் வீசி சென்றதும், இதனை உட்கொண்ட வளர்ப்பு நாய்கள் அடுத்தடுத்து பலியானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் நாய்களை விஷம் வைத்து கொன்ற வழக்கில் பாலுவை கைது செய்துள்ளனர்.

வளர்ப்பு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...