உடுமலையில் அறநிலையத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. 6 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.



உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோவில்கள் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட ஆறு ஜோடிகளுக்கு, இலவச திருமணம், அமைச்சர் கயல்விழி முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஆறு ஜோடிகளுக்கும், தலா 4 கிராம் தங்கம், மணமகன், மணமகள் ஆடை, கட்டில், பீரோ, மெத்தை, பொருட்கள், பாத்திரங்கள் என திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

அறநிலையத்துறை இணை ஆணையர் குமர துரை, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில், கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...