வால்பாறையில் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி கழக இயக்குனர் ஆய்வு!

வால்பாறையில் கன மழை பெய்து வரும் நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் கோவை மாவட்ட தென்மேற்கு பருவ மழை கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: வால்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சிக் கழக இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியது. மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் மரங்கள் விழுந்த நிலையில், சரி செய்யப்பட்டு உள்ளது.

மழையினால் பொது மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் கோவை மாவட்ட தென்மேற்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் வால்பாறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகள் குறித்தும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்தும் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.



இதில் அதிகமாக தண்ணீர் செல்லும் கூழாங்கல் ஆறு, குடியிருப்பு அருகில் செல்லும் வாழை தோட்டம் ஆறு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும் கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரி, வால்பாறை மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஜெயஸ்ரீ முரளிதரன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இவர்களுடன் வால்பாறை தாசில்தார் அருள் முருகன், நகர மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி செல்வம் மற்றும் வால்பாறை நகராட்சி ME. வெங்கடாசலம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...